Saturday 25 February 2012

வாழ்த்தலாம் வாங்க....,

                               

வாழ்த்துக்கள் உறவுகளே!
வாழ்த்துக்கள் உங்களிற்கு!
வாழ்த்துக்கள் உறவுகளே!
வாழ்த்துக்கள் எனது!
உள்ளம் இணைந்த இல்லம்
என்றும் இனிக்கும் வெல்லம்!

வானும் நிலவும் போல!
இணைந்து வாழ வேண்டும்!
காலச்சுழற்சி கொள்ளும் நிலவு
வானுள் கரைந்தும் வளரும்!

இன்பம் மட்டும் கூட்டி!
இதய இராகம் மீட்டி! எந்த
நிலையின் போதும் மாறா
அன்பை மட்டும் ஊட்டி!

வாழ வேண்டும் நீங்கள்
வாழ்த்துகின்றோம் நாங்கள்!
தமிழும் சுவையும் போல!
கவியும் இசையும் போல....,
 குழந்தை செல்வத்துடன்
குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்!

எத்தனை இன்பம்
இந்த நிமிடத்திலே!
கொட்டும் மழையும்
பூவாய் பொழிய.....,

அத்தனை தேவர்களும்
ஒருங்கே வாழ்த்த
உங்கள் திருமண வாழ்க்கை
மகிழ்வாய் அமைய
வாழ்த்துகிறேன்.

அன்புடன்,
தூயா.
டிஸ்கி: என் மாமா, மாமிக்கு இன்று இரண்டாம் ஆண்டு திருமண நாள் . அவங்களை வாழ்த்த வயதில்லை அதனால், வணங்குகிறேன்.

11 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் வாழ்த்து ( எனக்கும் வாழ்த்த வயது பத்தாது, எனவே இதை வணக்கமாக எடுக்கவும்)

Anonymous said...

கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.

மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,045,801.25 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதிலும் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.

மேலும் விவரங்களுக்கு : http://withoutinvestmentonlineworks.blogspot.in/2012/02/clixsense-advertising-that-pays-you.html

துரைடேனியல் said...

Vaalthukkal!

கூடல் பாலா said...

நாங்களும் வாழ்த்துறோம் .....

பால கணேஷ் said...

தூயா... ஆசீர்வாதம் பண்ணத்தான் வயசு வேணும். வாழ்த்தறதுக்கு வயசு வேணாம்... நல்ல மனசு இருந்தாப் போதும்னு நினைக்கிறவன் நான். (வாழ்த்த வயதில்லைன்னு சொல்லிக் கெடுத்ததே அரசியல்வாதிங்கதான்) அதனால சந்தோஷமா உன் மாமா, மாமியை நான் உன்னோட சேர்ந்து வாழ்த்தறேன். கவிதை நல்லா எழுதறம்மா...

முத்தரசு said...

உங்களுடன் சேர்ந்து வாழ்த்துகிறேன்

உழவன் said...

எனக்கு வாழ்த்த வயதில்லை..இருந்தாலும் இதை வணக்கமாக எடுக்கவும்..

Anonymous said...

இளங்கன்று தூயாவிற்கும், நீங்கள் வாழ்த்திய தம்பதிகளிற்கும் எனது மகிழ்வான வாழ்த்துகள் உரித்தாகட்டும். நீங்கள் மேலும் மேலும் சிறப்படைய வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

கீதமஞ்சரி said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_14.html

சக்தி கல்வி மையம் said...

hai...

Thava said...

வாழ்த்துக்கள்..கவிதை நன்று..நன்றி