Saturday 19 May 2012

உனக்காக காத்திருக்கிறேன்....,

 
உனக்காக கண் இமைக்காமல் காத்திருக்கிறேன்
உன்னால் கண் விழித்த இரவுகள் எத்தனை??
கனவிலும் நீ....,
கனவு கலைந்த பின்னும் நீ....,

வந்து வந்து போகிறாய்
வாட்டி வதைக்கிறாய்...,
காதலித்து ஏங்குபவர்கள் மத்தியில்
நீயோ வெறுக்க வைத்து ஏங்க வைக்கிறாய்...,

உனக்காகவே கரையும் என்னை
கரையேற்ற வந்துவிடு...,
எப்போதுமே என்னை திணற வைக்கும் என்
தேர்வு முடிவுகளே!

9 comments:

பால கணேஷ் said...

கவிதை ரொம்ப சூப்பரா இருக்கும்மா குட்டிப் புலியே! தேர்வு முடிவுகள் எனக்கும் மாணவப் பருவத்துல இப்படித்தான் இருந்தது. மலரும் நினைவுகளுக்குக் கூட்டிட்டுப் போன கவிதையப் படிச்சதுல சந்தோஷம் எனக்கு!

திண்டுக்கல் தனபாலன் said...

கவிதை அருமை !

முத்தரசு said...

தேர்வு பயம்..... கவிதை பிடிச்சிருக்குங்க

ராஜி said...

எக்சாம் டைம்ல அரட்டை அடிச்சு டைம் பாஸ் பண்ணிட்டு தேர்வு முடிவுக்கு காத்திருக்குறியா? ரிசல்ட் வரட்டும்டி. நீ நல்ல மார்க் எடுப்பேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு

வல்லிசிம்ஹன் said...

கம்பன் வீட்டுக் கட்டுத் தறியே நல்ல மார்க்ஸ் வந்துடும்.

MANO நாஞ்சில் மனோ said...

நல்ல மார்க் கிடைக்கும் கண்ணு, கவலைப்படாதே.

சி.பி.செந்தில்குமார் said...

80% வாங்க வாழ்த்துகள்..

சி.பி.செந்தில்குமார் said...

80% வாங்க வாழ்த்துகள்..

கவி அழகன் said...

Vaalthukkal